25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


“அமைதி நினைவுப்பூங்கா' ஜப்பான் நாட்டின்  ஹிரோஷிமா நகரில்….'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“அமைதி நினைவுப்பூங்கா' ஜப்பான் நாட்டின்  ஹிரோஷிமா நகரில்….'

 1945-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின்  ஹிரோஷிமா நகரம் மீது வீசப்பட்ட, அணு குண்டு தாக்குதலின் கோரம் எப்படி இருக்கும் என்புகுற்கு சாட்சியாக . ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீச்சு பாதிப்புக்கு உள்ளான இடங்கள் 'அமைதி நினைவுப்பூங்கா' என்ற பெயர் சூட்டப்பட்டு, பூங்காவின் வடக்குப் பகுதியில் அணு குண்டு தாக்கிய ஒரு கட்டிடத்தின் உள்ள 'ஏ-பாம்ப் டோம்' என்று அழைக் கப்படும் எஞ்சியிருக்கும் குவிமாடம் வேலி அமைத்து பாதுகாக் கப்பட்டு வருகிறது. ஹிரோஷிமாவின் சில பகுதிகள், போர் அச்சறுத்தல் குறித்து எதிர்கால சந்ததியினருக்கு எச்சரிக்கையை தரும் அருங்காட்சியகமாக இந்த நகரம் மாற் றப்பட்டு உள்ளது. 1996-ம் ஆண்டு முதல், இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது. ஹிரோஷிமாவின் ஏ-பாம்ப் டோம் குவிமாடம் மற்றும் இந்த பூங்காவை பார்வையிட ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். ஆனால், இந்த குவிமாடம் அருகில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஹிரோஷிமா நகரை கடந்து செல்லும் மோட் போயாசு ஆற்றின் பின்னணியில் காணப்படும் ஏ-பாம்ப் டோம் குவிமாடத்தை சற்று தொலைவில் இருந்து பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த அணுகுண்டு வீச்சால் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எனவே அதன் நினைவானது வலிமிகுந்ததாக இருப்பதால், இதனை அகற்ற வேண்டும் என்று சிலர் கூறினாலும், அணுஆயுதங்கள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளை மக்களுக்கு உணர வைக்கும் என்ப தால், இது எப்போதும் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று உலக அளவில் கருதப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News